Pages

செல்ல சண்டையிட்டு ..

நட்பே..

பூட்டிய கதவை இழுத்து சரி பார்ப்பதாய் ...

ஒவ்வொரு முறையும் என்னிடம் செல்ல சண்டையிட்டு ...

உறுதி செய்து கொள்கிறாய் ....

உன் மீதான என் நட்பை.. 

அன்பு நண்பா,,,


அன்பு நண்பா,,,

தாயாக நீயும் என் தலை கோத வந்தால்.. 

சேயாக ... 

உன் மடி மீது மீண்டும் ஜனனம் வேண்டும்...!!!

கொஞ்சம் பொறு ...


கொஞ்சம் பொறு ... 
சிந்திவிடதே ...

என் இமைகளை திறந்து கொள்கிறேன் ..
உன் கண்ணீரும் தரை தொட மறுப்பேன்...!

மௌனம் அழகானது


உன் மௌனம் அழகானது தான் 
எனினும் உன்னிடமிருந்து உதிரும் 
ஓரிரு வார்த்தைகளுக்காக காத்திருக்கிறேன்.. 

தாள் பிரித்து மிட்டாய் பார்க்கும் குழந்தையின் ஆர்வத்தோடு ....!!!!

நட்பில் பிரிவு என்பது துயரமல்ல….!

நட்பின் கைகளைப் பற்றி
நெடுந்தூரப் பயணம் செய்வோம்
எதேனும் ஒரு இடத்தில்
உன்னாலோ அல்லது என்னாலோ
பயணத்தை தொடர இயலாமல்
போகலாம்.
உள்ளத்தில் துப்பறியும் நோக்கமின்றி
நட்பறியும் எண்ணத்தில் பழகிய உறவில்
நீயின்றியோ,அல்லது நானின்றியோ
நட்பின் பயணம் தொடர்ந்து கொண்டு
தான் இருக்கப் போகிறது.
வாழ்வின் எந்த தருணத்திலும்
நம்மை அழைத்துக் கொள்ள
ஆயத்தமாகவே இருக்கிறது
நட்பின் பயணம்.
நம் விரல்களின் பற்றுதலிலோ
நம் விழிகளின் பார்வையிலோ
நம் முகத்தின் புன்னைகையிலோ
என்றேனும் நம் நட்பின் பயணம்
தன்னைப் புதிப்பித்துக் கொள்ளும்
தருணம் உணரலாம் நாம்!
நட்பில் பிரிவு என்பது துயரமல்ல…. !

காதல்… நம் நட்பின் மீது….

எட்டி பார்க்கவும் முடியவில்லை…

கட்டி அணைக்கவும் முடியவில்லை….

இருப்பினும் முத்தமிடுகிறேன் உன்….

அழகான இதயத்திற்கு….

இந்த வார்த்தைகளால் !!!…