நட்பின் கைகளைப் பற்றி
நெடுந்தூரப் பயணம் செய்வோம்
எதேனும் ஒரு இடத்தில்
உன்னாலோ அல்லது என்னாலோ
பயணத்தை தொடர இயலாமல்
போகலாம்.
உள்ளத்தில் துப்பறியும் நோக்கமின்றி
நட்பறியும் எண்ணத்தில் பழகிய உறவில்
நீயின்றியோ,அல்லது நானின்றியோ
நட்பின் பயணம் தொடர்ந்து கொண்டு
தான் இருக்கப் போகிறது.
வாழ்வின் எந்த தருணத்திலும்
நம்மை அழைத்துக் கொள்ள
ஆயத்தமாகவே இருக்கிறது
நட்பின் பயணம்.
நம் விரல்களின் பற்றுதலிலோ
நம் விழிகளின் பார்வையிலோ
நம் முகத்தின் புன்னைகையிலோ
என்றேனும் நம் நட்பின் பயணம்
தன்னைப் புதிப்பித்துக் கொள்ளும்
தருணம் உணரலாம் நாம்!
நட்பில் பிரிவு என்பது துயரமல்ல…. !
நெடுந்தூரப் பயணம் செய்வோம்
எதேனும் ஒரு இடத்தில்
உன்னாலோ அல்லது என்னாலோ
பயணத்தை தொடர இயலாமல்
போகலாம்.
உள்ளத்தில் துப்பறியும் நோக்கமின்றி
நட்பறியும் எண்ணத்தில் பழகிய உறவில்
நீயின்றியோ,அல்லது நானின்றியோ
நட்பின் பயணம் தொடர்ந்து கொண்டு
தான் இருக்கப் போகிறது.
வாழ்வின் எந்த தருணத்திலும்
நம்மை அழைத்துக் கொள்ள
ஆயத்தமாகவே இருக்கிறது
நட்பின் பயணம்.
நம் விரல்களின் பற்றுதலிலோ
நம் விழிகளின் பார்வையிலோ
நம் முகத்தின் புன்னைகையிலோ
என்றேனும் நம் நட்பின் பயணம்
தன்னைப் புதிப்பித்துக் கொள்ளும்
தருணம் உணரலாம் நாம்!
நட்பில் பிரிவு என்பது துயரமல்ல…. !
No comments:
Post a Comment