Pages

இதயத்தில் என் நண்பன் நீ

வானமும் பூமியும் இறைவனின் சொத்து, 

இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு' 

*******************************************************
"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன் நீ"

********************************************************

சின்ன சின்ன கதை பேசி
சிரித்து மகிழ்வதற்காய்
சென்ற பல பொழுதுகளில்
சேர்ந்திருந்தோம் நாம்...!
சொந்தபந்தம் எதுவுமின்றி
சொந்த கதை பல பேசி
நித்தம் நித்தம் நீண்ட தூரம்
நினைவுகள் பல பகிர்ந்தோம்...!
நோய்வுற்ற நேரத்திலே
நேரம் காலம் பார்க்காது
நேர்த்தியுடன் என்னருகே
நீ இருந்தாய் ஆறுதலாய்...!
உன் சுமைகள் உட் புதைந்தே
என் பாரம் தோள் தாங்கி
ஏற்றம் காண்பதற்காய்
என்னுடனே உழைக்கின்றாய்...!
சோதனைகள் சூழ்ந்து வர
வேதனையால் வேலியிட்டாய்
விளைபயிராம் நட்பிதனை
பாதகமேது இன்றி
பாதுகாப்பதற்காய்...!
பாசமென்னும் பாத்திரத்தில்
வேசமென்னும் உடையணிந்து,
வெறுப்புடனே கதை பேசி
வெட்டி செல்ல நினைத்தாலும்
ஒட்டியே போகிறது
ஓரிடத்தில் உன் பேச்சு...!

உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..!

நினைக்கும் பொழுதிகளில்

கண்முன் தோன்றி
தவிக்கும் பொழுதுகளில்
தலை தடவி
ஆறுதல் சொல்லி
பாசம் என்னும்
செடியை வளர்த்து
சொந்தம் என்னும்
உறவை கொடுத்து
இன்பம் என்னும்
உணர்வை கொடுத்து
உயிரிலும் மேலான
நட்பைக் கொடுத்து
நட்சத்திரமாக
பிரகாசிக்கும்  தோழா
நீ வேண்டும் என்
வாழ்வின் எல்லை வரை...

*********************************************

பகலினை விழுங்கி
இரவினை பிரசவிக்கும்
இயற்கையின்
விந்தையான நேரத்தில்
சில்லென்று வீசும் காற்று
கரையினை தொட்டு
ஆர்ப்பரிக்கும்
அலைகளின் ஓசை
புதர்களின் மறைவில்
காதலர்களின்
முத்தத்தின் சத்தம்
அங்காங்கே காதல் ஜோடிகள்
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் பக்கத்தில் அவள் 

கண்ணீரை அருவியாக கொட்டுகிறாள்
சமுகம் அவர்களை ஏளனம் செய்தது
கள்ள காதல் என்று..
யாருக்கு புரியும் - அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று...

**********************************************

அன்பாக கவிதை கேட்டாய் ...
ஆசையாய் எழுத அமர்ந்தேன்
இன்ப நினைவுகள் பொங்கின
ஈட்டியாக குத்தியது சோகம்
உடனே தடுமாறியது மனம்
ஊமையாய் அழுதது இதயம்
எப்படி இனி கவிதை எழுத........
ஏனடி உனக்கு பிடிவாதம்
ஐயம் வேணாம் ஆயுசுக்கும் நீ தான்
ஒரு நாளும் மறவேன் உன்னை
ஓர் நாள் மறந்தால் ஓடி வா கல்றைக்கு
பவ்வியமாக தூங்கும் என் உடல்
உன் நினைவுகளோடு......!

********************************************************

உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர்
கொண்டு பார்க்கின்றேன்....
********************************************************
மரத்தில் பறிக்க பறிக்க
மலரும் மலரல்ல - உன்
மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு...

*********************************************************

கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை
காதல்...
ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...

*********************************************************

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள்
என் இதயம்....

******************************************************

தோHnd என் இரு விழிகள்
ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே.....

*****************************************************

மழலையின் சிரிப்பு  

மழலை.....
செவிக்கு இனியதாய்
மழலையின் மொழி...
தொட்டு அணைக்கும்
மழலையின்...
புத்தம் புது சுகம்...
விரல் பிடித்து கடிக்கும்
மழலையின்...
இனிய எச்சில்கள் என்றும்
உன் விரல்களோடு...
மலரின் இதழ்களாக
மழலையின் சிரிப்பு...
என்றும் உனக்கு..... 

***********************************************************

நண்பா...
உன் பெயர் சொல்லி முடிக்கும் இரண்டொரு நொடிப் பொழுதில்
நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றுகிறது உறவுகள்!
"ஆண் நட்பா? கூடாதென்று!!"
உண்மை தான்....
நட்பு என்ற அரிதாரம் கொண்டு
நம் சமூகம் அரங்கேற்றும் அவலங்கள் யாவும் தீர்ந்தொழியும் வரை
நமக்கான நட்பை நிறம் மாறாமல் வாசித்துப் பார்க்க
எவருக்கும் வாய்க்காதட நண்பா!!!!!!!!

நண்பா என்றும் உன் நினைவுகளுடன் ! 

***********************************************************

என் நண்பனைச்
சந்தித்த பின்
நான் கண்ணீரைச்
சந்திக்கவில்லை !
************************************************************
இன்பங்களையும்
துன்பங்களையும் பகிர்ந்துக் கொண்டான்
எல்லா உறவுகளையும் முறிக்கும்
பணத்தை மட்டும் பகிர்ந்துக் கொள்ளவில்லை
ஏனென்றால் அவன் பணத்தை
என் பணம் உன் பணம் என்று பிரிக்கவில்லையே !
நாங்கள் பணத்தையே பிரிக்கவில்லை
பணம் எப்படி எங்களை பிரிக்கக முடியும் !
***********************************************************

காயம்பட்டால் கூட
எனக்கு வலிப்பதில்லை
எனக்காக விரதமிருந்து பிராத்தனைச் செய்து
மருந்து போட நண்பன் இருக்கிறான் என்ற
தைரியத்தால் ...
***********************************************************

வேதனை 

சொல்ல முடியாத
என் வேதனைகளை
கண்ணீராய் கொட்டுகிறேன் ........
தோழா நீ இல்லாத
ஒவ்வொரு நாளும்
எனக்கு மரண நாட்களே..........

**********************************************************

நட்பா? காதலா? 

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்
நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்
நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்
என்னை நானாக பார்த்தது
நட்பு தான்
காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்
எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.

********************************************************************************************* 

ஊடல் வேண்டும் உன்னுடன் எனக்கு  

அன்பே.....
உன்னை நான்
பார்க்காத போது...
என்னுடன் நீ இருந்த
நினைவலைகள்...
என்னுடன் நினைவாக...
உன்னை நான்
காணும் போது...
நீ செய்த சின்ன
சின்ன குறும்புகள்...
என் நினைவில்...
உன்னுடன் மீண்டும் ஓர்
ஊடல் வேண்டும் எனக்கு...
மீண்டும் நான் உன்னை
கட்டி தழுவ.....

கொல்லாதே 

பார்க்காமல்
தாண்டி சென்றாய்
கண்கள் ரெண்டில்
காயம் தந்தாய்
காணாமல்
போக வைத்தாய்
காலங்கள்
காக்க வைத்தாய்
சுவாசங்கள்
திணற வைத்தாய்
உயிரை மட்டும்
ஏன; விட்டு வைத்தாய்
கொஞ்சம் கொஞ்சம்
கொலைகள் செய்யும்
செயலை விட
உயிரை மட்டும்
எடுத்து செல்லும்
பணியை செய்…..

*************************************

No comments:

Post a Comment