அர்த்தமற்ற என் வார்த்தைகளை
புரிந்துகொள்ள இயலாத உன்னால்
எந்நாளும் அர்த்தமுள்ள என் மௌனங்களை
புரிந்துகொள்ள முடியாது
---------------------------
எண்ணமெல்லாம் இனிமையோடு
வண்ணத்துபூச்சிகள் சூழ
கனா காண்கிறேன் நான் உன் நட்பின் நினைவுகளோடு
கனவிலேனும் புன்னகை சிந்த......
-------------------------------------------
என் பார்வைகளில்
நீ ஒழிந்திடலாம்
என் வார்த்தைகளை
நீ மறந்திடலாம்
என் மனதை நீ
எரித்திடலாம்
என் நட்பை நீ
என்ன செய்வாய் குட்டிமா.....!!
-------------------------------
அழகு குட்டி செல்லம்
உன்னை
அள்ளிதூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து
போனேன். . !
ஆளை கடத்தி போகும்
உன் கன்ன குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன். . !
--------------------------------------
பேசுவதை நிறுத்திக்கொண்டால் நான் நம் நட்பை மறந்துவிடுவேன்
என்று எண்ணி விடாதே !
என் உடல் அசையும் வரை தொடரும் நான்
நம் நட்பின் மீது கொண்ட காதல் !!
-------------------------------
அன்று ஆயிரம் சண்டைகள்
போட்டுக் கொண்ட போதும்
நானும் நீயும் பிரிய வில்லை.
இன்று சண்டைகளே இல்லை
ஆனாலும்
நீ என் அருகில் இல்லை.
----------------------------------
நிலவிலும்
பிரகாசமான நீ
உன் கையில்
தவழும் போது
குழந்தையாய் நானும்
தாயாய் நீயும் மாறும்
அத்மாத்தமான உறவில்
திளைக்கும் நம்
நட்பு. ♥
உந்தன் மடியில் ஒரு இடம் வேண்டும் எந்தன் உயிர் பிரிவதற்குள்!!
---------------------------------
எல்லோரும் தனக்கு ஒரு இதயம் இருக்கிறது என்பதை உணர்வதே ..
யாரோ ஒருவரின் அன்பை ரசிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான்..!" ♥
----------------------------------------
தோள் சாய உன் தோள் கொடு...
சிறிது நேரம் என் துக்கம் மறந்து
தூங்கி கொள்கிறேன்..
நட்பால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்...
நட்பே என்றும்
எனக்கு மட்டுமே நட்பாய் இரு....
---------------------------------
என் நட்பே!!!
எனக்கும் மட்டும்
உன் அன்பை தந்துவிடு...
பாசத்தை பகிர்ந்து தருவது
அன்னையாக மட்டுமே
இருந்து போகட்டும் ♥
-----------------------------------
நட்பை தேடி அலைந்து
தோல்விகள் கண்டு துவளாமல்
துயரம் மறைத்து
இன்முகத்தோடு தேடுதலை
தொடரும் நெஞ்சம்.....
----------------------------------
தேடல் தொடரும்....
No comments:
Post a Comment