Pages

எனக்கு மட்டுமே நட்பாய் இரு....


அர்த்தமற்ற என் வார்த்தைகளை 
புரிந்துகொள்ள இயலாத உன்னால் 
எந்நாளும் அர்த்தமுள்ள என் மௌனங்களை 
புரிந்துகொள்ள முடியாது

---------------------------

எண்ணமெல்லாம் இனிமையோடு
வண்ணத்துபூச்சிகள் சூழ
கனா காண்கிறேன் நான் உன் நட்பின் நினைவுகளோடு
கனவிலேனும் புன்னகை சிந்த......

-------------------------------------------

என் பார்வைகளில்
நீ ஒழிந்திடலாம்
என் வார்த்தைகளை
நீ மறந்திடலாம்
என் மனதை நீ
எரித்திடலாம்
என் நட்பை நீ
என்ன செய்வாய் குட்டிமா.....!!

-------------------------------

அழகு குட்டி செல்லம்

உன்னை

அள்ளிதூக்கும் போது

உன் பிஞ்சு விரல்கள் மோதி

நான் நெஞ்சம் உடைந்து

போனேன். . !

ஆளை கடத்தி போகும்

உன் கன்ன குழியின் சிரிப்பில்

விரும்பி மாட்டி கொண்டேன்

நான் திரும்பி போக மாட்டேன். . !

--------------------------------------

பேசுவதை நிறுத்திக்கொண்டால் நான் நம் நட்பை மறந்துவிடுவேன் 
என்று எண்ணி விடாதே ! 
என் உடல் அசையும் வரை தொடரும் நான்
நம் நட்பின் மீது கொண்ட காதல் !!

-------------------------------

அன்று ஆயிரம் சண்டைகள் 
போட்டுக் கொண்ட போதும் 
நானும் நீயும் பிரிய வில்லை.

இன்று சண்டைகளே இல்லை 
ஆனாலும் 
நீ என் அருகில் இல்லை.

----------------------------------

நிலவிலும்
பிரகாசமான நீ
உன் கையில்
தவழும் போது
குழந்தையாய் நானும்
தாயாய் நீயும் மாறும்
அத்மாத்தமான உறவில்
திளைக்கும் நம் 
நட்பு. ♥

உந்தன் மடியில் ஒரு இடம் வேண்டும் எந்தன் உயிர் பிரிவதற்குள்!!

---------------------------------

எல்லோரும் தனக்கு ஒரு இதயம் இருக்கிறது என்பதை உணர்வதே ..
யாரோ ஒருவரின் அன்பை ரசிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான்..!" ♥

----------------------------------------

தோள் சாய உன் தோள் கொடு...
சிறிது நேரம் என் துக்கம் மறந்து
தூங்கி கொள்கிறேன்..
நட்பால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்...
நட்பே என்றும்
எனக்கு மட்டுமே நட்பாய் இரு....

---------------------------------

என் நட்பே!!!
எனக்கும் மட்டும்
உன் அன்பை தந்துவிடு...
பாசத்தை பகிர்ந்து தருவது
அன்னையாக மட்டுமே
இருந்து போகட்டும் ♥

-----------------------------------

நட்பை தேடி அலைந்து 
தோல்விகள் கண்டு துவளாமல் 
துயரம் மறைத்து 
இன்முகத்தோடு தேடுதலை 
தொடரும் நெஞ்சம்.....

----------------------------------


தேடல் தொடரும்....

No comments:

Post a Comment