Pages

இப்படி ஒரு தோழி அல்லது காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

இப்படி ஒரு தோழி அல்லது காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள். நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால், அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப்பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்காவிட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக்கொள்வாள்.

ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான் இறைவன்.....!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்..

இளவேனில் உன் வாசல் வந்தாடும்,
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்..

இளவேனில் உன் வாசல் வந்தாடும்,
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்....

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்....

  

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்..
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்...

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்...
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்...

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு,
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு..

இதிலென்ன பாவம்..
எதற்கிந்த சோகம் கிளியே............!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

  

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது,
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது...

கடல்களில் உருவாகும் அலையானது,
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது....

நிலவினை நம்பி இரவுகள் இல்லை,
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை...

ஒரு வாசல் மூடி,
மறுவாசல் வைப்பான் இறைவன்.....!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்.....!!!!

எதுவரை வாழ்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்...

எதுவரை வாழ்கை அழைக்கிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்...

விடைபெறும் நேரம் வரும்போதும் 
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்...

பரவசம்.. இந்த பரவசம்...
எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கு வாழுமே....

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

  

நாமெல்லாம் சுவாசிக்க தனித்தனி காற்று கிடையாது...
மேகங்கள்.. மேகங்கள்.. இடங்களை பார்த்து பொழியாது...

கோடையில் இன்று இல்லை உதிரும்..
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்...

வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்...

முடிவதும்.. பின்பு தொடர்வதும்...
இந்த வாழ்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி....

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

கருணை தாங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு...

இன்னும்... வாழனும்... நூறு ஆண்டு.....!

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்...
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே, பூமியில் வாழ்கையை நம்பி வாழ்ந்து விடைபெருவோம்...!!

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

மனமே, ஓ மனமே நீ மாறிவிடு....!

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது...
என்ன இந்த வாழ்கை என்று எண்ணம் தோன்ற கூடாது...

எந்த மனிதன் நெஞ்சுக்குள், காயம் இல்லை சொல்லுங்கள்...
காலப்போக்கில் காயம் எல்லாம், மறந்து போகும் மாயங்கள்...

உளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும்..
வழி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்...

யாருக்கில்லை போராட்டம்,
கண்ணில் என்ன நீரோட்டம்...
ஒரு கனவு கண்டால், அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்.....

மனமே, ஓ மனமே நீ மாறிவிடு....
மழையோ, அது பணியோ நீ மோதிவிடு....

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...

  

வாழ்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்...

லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு..

மனிதா உன் மனதை கில்லி விதைபோடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்...

தோல்வி இன்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா..
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்....

மனமே, ஓ மனமே நீ மாறிவிடு....
மழையோ, அது பணியோ நீ மோதிவிடு....

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே..
இரவானால் பகலோன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்.. நம் வாழ்வில்...
லட்சியம் நிச்சயம் வெல்வோம்.. ஒரு நாளில்...

மனமே, ஓ மனமே நீ மாறிவிடு....
மழையோ, அது பணியோ நீ மோதிவிடு....!!!!!!