Pages

எதுவரை வாழ்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்...

எதுவரை வாழ்கை அழைக்கிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்...

விடைபெறும் நேரம் வரும்போதும் 
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்...

பரவசம்.. இந்த பரவசம்...
எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கு வாழுமே....

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

  

நாமெல்லாம் சுவாசிக்க தனித்தனி காற்று கிடையாது...
மேகங்கள்.. மேகங்கள்.. இடங்களை பார்த்து பொழியாது...

கோடையில் இன்று இல்லை உதிரும்..
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்...

வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்...

முடிவதும்.. பின்பு தொடர்வதும்...
இந்த வாழ்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி....

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

கருணை தாங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு...

இன்னும்... வாழனும்... நூறு ஆண்டு.....!

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்...
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே, பூமியில் வாழ்கையை நம்பி வாழ்ந்து விடைபெருவோம்...!!

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

No comments:

Post a Comment