உன்னாலே எனக்குள் உருவான உலகம்....
பூகம்பம் இன்றி சிதருதடா...
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே...
என்னை இன்னும் வாழ சொல்லுதடா....
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்...
தொட போகும் நேரம் மரணத்தின் வாசல்....
காட்டு தீ போல கண்மூடி தனிமை....
என் சோகம் சுடர்விட்டு எரியுதடா....
மனசுக்குள் சுமந்த ஆசைகளெல்லாம்...
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா....
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்....?
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்,
பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா.....
பூவானம் போர்க்களமாய் மாறுதடா....
காலம் கூட கண்கள் மூடிகொண்டதடா....
உன்னைவிட, கல்லறையே பக்கமடா....
No comments:
Post a Comment