Pages

மௌனித்தலிலும்... வலிகளடா

பேசவே கூடாதென்ற 
 முடிவோடு தான் மௌனித்தேன் .. 
அரைகுறை கனவினில் 
 உந்தன் புன்னகை 
 கண்ணில் தெரியும்வரை.... 
மௌனித்தலிலும்... வலிகளடா 
உன்னோடு மட்டும் 
 உன்னிடம் மட்டும்

வெற்றிடத்தில் வெறுமையாய்

எதையுமே எண்ணிட தோன்றாது
எதையுமே பேசிட தோன்றாது..
உன் நினைவுகள் மட்டும்
உந்தன் பெயரினை மட்டும் மனதில்...
அசைபோட்ட படி
வெற்றிடத்தில் வெறுமையாய்
நான் நான் மட்டுமே 

உன் குரல் போதும்....

உன் குரல் கேட்டாலே உதிரத்தில்
அலையடிக்கும்...

உன் குரல் போதும்...
உயிரின் அணுவும அதிரும்..

எந்த பட்டு கேட்ட போதும் உந்தன்
நினைவே நெஞ்சில் மோதும்...

என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்....