யோசிக்காத வார்த்தைகளால்
யோசிக்க வைக்கும் மெளனங்களால்
என்னை புறந்தள்ளிப் போகிறாய்
இருமுகம் இடிக்கும் நெருக்கம் வந்து
தாடை பிடித்து முத்தமிட்டு கெஞ்சினாலும்
உன்னுடன் பேசக் கூடாது
உன்னைப் பார்க்கக் கூடாது
உன் நினைவை
அடியோடு அறுத்தெரிய வேண்டு
என வைராக்கியமாய்
நான் எடுக்கும் சபதங்கள் எல்லாம்
அருகில் கூட நீ வராத
உன் ஆளுமை கனிந்த சிரிப்பு தீண்டி...
நொடியில் தவிடு பொடியாகிப் போகிறேதே தலைவி...
எனக்குள் கலந்தாடி
என்னை அணு அணுவாய்
கூறு பிரித்து பாதியானவளே
நீ என்ன என் பலவீனங்களின் நேசப் ப்ரியமா....??
No comments:
Post a Comment