Pages

கவிதைகள் சொல்லவா?

இதயம் கூட
இடைவெளி விட்டுத்தான்
துடிக்கும்!
அந்த இடைவளி கூட
உன்னைப்பற்றித்தான்
நினைக்கும்... ♥

********************

எனக்கு பிடித்தது போல்
உன்னை படைத்த இறைவன்
ஏனோ எனக்கென்று எழுதாமல்
விட்டு விட்டான் உன்னை....

********************

தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியாமல் தவிக்கும்
இதயத்தின் ஆசைதான்
காதல் ♥ ♥ ♥

********************

கண்ணில் கண்ட பெண்ணை
நேசிப்பதை விட,
உன்னை கருவில் சுமந்த
தாயை நேசி
உன்னையும் ஒரு பெண் நேசிப்பாள் ♥ ♥ ♥.

********************

விடியும் வரை தெரியாது, 
நடந்தது கனவு என்று...... 

... அன்பும் அப்படித்தான்.. 
பிரியும் வரை தெரியாது. 
எவ்வளவு ஆழமானது என்று....

*********************

Orumurai Kadhalum Natpum Sandhithu kondana...

Kadhal: Naan vandhuvitta piragu nee edharku...?

Nattpu: Nee vittu sendra piragu, Kanneer thudaippadharkku...

*********************

Imai pozhudhum idai vidaamal..
Alavukku adhigamaaga
enn manadhil pudhaindhirukkum

Unn ninaivugaley.....

Unn mouna nerangalil ennai
mirugamaai maatrugiradhu...

**********************

தனிமையைத்
தேடுகிறேன்!
என்னுள் புதைந்த
உண்மைகளை
மறப்பதற்கு
உன் நினைவுக்குள்!

**********************

நீ முறைத்தால் என்ன...?
நீ மறுத்தால் என்ன..?
நீ தடுத்தால் என்ன...?
நீ போனால் என்ன...?
நான் காத்திருப்பேன்...
நீ தந்த காயங்களை,
தாங்கிய இதயமுடன்

**********************

சந்திக்கும்போது

எதார்த்தமாக அமைந்தாலும்

சாகும் வரை

எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது.

"நட்பு"......

***********************

Unakkaaga kaathiruppadhai vida...
Enn maranathirkaaga kaathirukkalaam....

Adhu mattumey oru naal nichayam ennai thedi varum.....

***********************

நீ பார்த்த நிலவு அழகா?
நான் பார்த்த நிலவு அழகா?
நீ வானத்தை பார்க்கிறாய்
நானோ உன் முகத்தை பார்க்கிறேன்

***********************

நினைக்கும்பொழுதெல்லாம் நிசப்தமாய்

இரண்டு வருட அனுபவம்...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம்
நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...



கண்கள் சந்தித்ததால் காதல் வந்தது

கேள்விப்பட்டிருக்கிறேன் ..........

மோதல் வந்ததால் காதல் வந்தது

அறிந்திருக்கிறேன்................

நாமோ......

காதலைக் கற்றுக்கொண்டது

வார்த்தைவிளையாட்டாலல்லவா
தோழி......



இரண்டு வருட அனுபவம்...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம்
நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...



தொலைப்பேசியில்......

மௌனத்திற்கு சில நிமிடம்...

மோகத்திற்கு சில நிமிடம்...

சண்டைக்கு சில நிமிடம்...

சமாதானத்திற்கு சில நிமிடம்...

சந்தோசத்திற்குசில நிமிடம்...

முத்தமழைபொழிய சில நிமிடம்...



இரண்டு வருட அனுபவம்...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம்
நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...



முதல்சந்திப்பில்...........

..


கண்கள் சந்தித்தபோது......

கலக்கமான சலனம் ஏனோ?

பயணப்பொழுதுகளிலெல்லாம்.......

அனுபவசாலியாய் பழகினாய்.....

அலைக்கழிக்காமல் அரும்பினாய்.....

அருகிலமர்ந்து அனுபவித்தேனடி தோழி..


எட்டுமணிநேரமும்.............

எட்டு நிமிடமானதடி தோழி.



இரண்டு வருட அனுபவம் ...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம் நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...

நட்பே... நீ எனக்கு நட்பாக வேண்டும்..

பார்த்ததும்..... ரசித்ததும்.........

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..

காதல் vs கல்யாணம்

சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.

* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.


* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்


* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்


* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.


* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்


* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்


* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.


* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.


* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்

மீண்டும் கல்லூரியில் ஓர் நாள்

மீண்டும் கல்லூரியில் ஓர் நாள்  
கல்லூரி வாழ்க்கை முடிந்து
ஆனது இரண்டு வருடம்....

மீண்டும் கல்லூரிக்கு ஒருநாள்
சென்று வந்தேன்...

கல்லூரியில் பல மாறுதல்கள்
முதல் மாறுதல்
மாணவனாய் சென்ற நான்
அன்று பழைய மாணவனாய்
அறிமுகம் செய்துகொண்டு உள்ளே சென்றேன்....
h
கல்லூரியின் படிக்கட்டுகளில்
முன்னோக்கி ஏறினேன்
என் கல்லூரி நாட்கள்
பின்னோக்கி அழைத்தது....

அதே படிக்கட்டில் ஜூனியர்
மாணவன் ஒருவனோடு
கட்டிபுரண்டு சண்டையிட்டது
படிக்கட்டின் படிகளில் அமர்ந்து
அரட்டை அடித்து
மாணவிகளை வம்பிகிளுத்ததாய்
பல ஞாபகங்கள் என்னுள்....

தனிமை உணர்ந்ததில்லை நான்
அன்று உணர்ந்தேன்
என் நண்பர்கள் இல்லாத
கல்லூரியில் நான் மட்டும் நடந்தபோது....

என் கண்கள் தேடிசென்று
நின்றது எங்களது வகுப்பறையில்
என்னை வரவேற்று கண்ணீர்
சிந்துவது போல் உணர்தேன்
என் இருப்பிடத்தை பார்த்தபோது....

மௌன மொழி பேசி
எனது இருப்பிடம் என்னிடம் கேட்டது
நீ மட்டும்தான் வந்தாயா என்று....

இதயம் கனத்தது
என்னை அறியாமல் ஓர்
வலி என்னில் தோன்ற
என் சந்தோசத்தை மட்டுமே பார்த்த
என் இருப்பிடம் என் சோகத்தையும் பார்த்தது....

என் இருக்கையில்
கிறுக்கி வைத்த என்
நண்பர்களின் பெயர்களை
தொட்டு பார்த்து கலங்கியது கண்கள்....

கண்ணீரை தொடைத்து கொண்டு
மெல்ல நடந்தேன் கேண்டீனை நோக்கி
ஒரு டி வங்கி ஒன்பது பேர் குடிக்கும்போது
உள்ள சுகம் தனியாளாய் அன்று குடிக்கும்போது
கிடைக்கவில்லை....

கேண்டீன்
மரத்தடி
கல்லூரி பேருந்து
என நாங்கள் களித்த இடங்களில்
நான் மட்டும் நின்று
சற்று நேரம் கல்லூரி நாட்களில்
மீண்டும் வாழ்ந்து பார்த்தேன்....

காதல் வந்த தருணம்
காதல் சொல்லிய தருணம்
காதலில் வாழ்ந்த தருணம் என
என் நினைவுகள் நிழலாய் வந்தது....

அலைபேசியை எடுத்து
என் நண்பர்கள் அனைவருக்கும்
தகவல் அனுப்பினேன் நான்
கல்லூரியில் இருக்கேன் என்று
அனைவரும் reply செய்து
நாங்கள் வாழ்ந்த நாட்களை
நினைவுபடுத்தி கொண்டனர் என்னோடு....

நான் கிளம்பும் நேரம்
கல்லூரியை ஏற இறங்க பார்த்துவிட்டு
பெருமூச்சு விட்டு திரும்பி நடந்தேன்....

என் உடல் மட்டுமே திரும்பி நடந்தது
என் நினைவுகள் அனைத்துமே
சுற்று சுவர் இல்லாத
எங்கள் கல்லூரியை சுற்றி திரிந்தபடி....

மீண்டும் கிடைக்காத நிமிடங்கள்
மீண்டும் கிடைக்காத என ஏங்கும் நிமிடங்கள்
கல்லூரி வாழ்கையில் மட்டுமே....

தோழர்களே நேரம் கிடைத்தால்
நீங்களும் சென்று வாருங்கள்
உங்கள் கல்லூரிக்கு
நீங்கள் சந்தோசமாக இருந்த
நாட்களை நினைவு படுத்தி வாருங்கள்....

கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம்

25 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமாபதட்டபடுத்தி
கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்கஇருக்கு இந்த
கல்யாணத்துல....


முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்க்ற பேர்லஉங்க
வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டுபோகும்....

பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணியஅடுகிக்குவாங்க‌...உங்க
பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்தபுடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ்
போகும்போது சீக்கிரம் வீட்டுக்குவந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட
மூச்ச விட்டுகிட்டேசொல்லுவாங்க‌...ஊர்
ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த
புள்ளைக்குஇவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம்
வரஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)


அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல
நடக்கும்...(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு
ஐடியாகுடுப்பாங்க‌...)


மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங்கூட்டிட்டு
போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்தஎல்லாத்தையும் அப்பதான்
வாங்குவாங்க‌....
அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம்அழுகனும்...
கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...
அவங்களோட .ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட்கிழிய கிழிய தேய் தேய்னு
தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசுபதர்னாலும் உதடு வேற என்ன வேணும்
என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.

வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போன்ற அவங்கப்பன்விருமாண்டி கிட்ட
கூட பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன்
மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம்கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...


ஆறு மாசம் ஓடிடும்...
அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...


பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம்அதுக்கப்றம்
கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாமஎங்கெங்கயோ போன
தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமேஇருக்கும்...எந்த பொண்ண
பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டிஇருப்பாளோ,அப்டி இருப்பாளோங்கற அந்த
curiosity சுத்தமாஇருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற
பீர்,தம்[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம்
கட்ஆகும்....
என்ன கொடும சார் இது....
இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...

வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelor life மட்டும்தான்னு எனக்கு தோனுது..

நீங்க என்ன நெனைக்கறீங்க..

எப்படிங்க இருக்கணும் உங்களோட marriage life?

எப்படிங்க இருக்கணும் உங்களோட marriage life?
இப்படி இருந்தாகொஞ்சம் உங்களோட busy ஆனா டைம் spend பண்ணி தான்பாருங்களேன்!!!


உங்களோட 25 / 26 வையசுல திடிருன்னு parents உங்களுக்கு ஒரு பொண்ணபார்த்தாச்சு அப்படின்னு சொன்னதும்,
மனசுக்குள்ள 1000 Butterfly பறக்குமே அத எப்படி கொண்டாடனு அப்படின்னுயோசிச்சிகிட்டே இருக்கற சமயம்,
Friends கு எல்லாம் உடனே Treat குடுக்க ஒரு நல்ல Resturant போய்டு Happy யாenjoy பண்ற டைம் ,
உங்க friend ஒருத்தேன், "மச்சா பொண்ணு நல்ல இருக்காஇல்லையா நுதெரியாமலயே treat அஹ!!" இன்னு கேட்டதும்,
உடனே ஒரு பயம்எப்படி அவ இருப்பாளோ இன்னு.

சரி ன்னுஒரு நாள் அம்மாஅப்பாஅக்காமாமா இன்னு எல்லாரும் அந்தபொண்ண பார்க்க போவிங்க,
கண்ணடிப்பா அந்த பயம் இருக்கும்.... ஆனாலும் அதுக்குன்னு புதுசா ஒரு shirtவாங்கி அத போட்டுட்டு,
கொழந்தைங்க ஏதும் செஞ்சா திட்ற நீங்க அன்னைக்கு மட்டும் அவங்களோடவிளையாடிகிட்டே பொண்ண பார்க்க ட்ரை பண்ணுவிங்க பாருங்க?
அப்ப வழியும் ஒரு water falls .... இத கண்டிப்பா அந்த பொண்ணு பார்திருப்பா......

சரி ஒரு வழியா பெரியவங்க எல்லாம் சேர்ந்து பொண்ண வர சொல்வாங்க....நீங்களும் coffee தட்ட பார்த்துகிட்டே மேல பர்பிங்க....
அவளவு தான்... ஒரே ஷாக், "நமக்கு இவ்வளவு அழகான பொன்னாஇன்னு"....அதுக்கப்பறம்  பஜ்ஜி எல்லாம் சாப்டு கிளம்பிடுவிங்க....

அப்புறம் எங்க உங்களுக்கு தூக்கம்..... ஒரே நெனப்பு தான். Phone பண்ணலாம்னுயோசிப்பிங்க ஆனா number இருக்காது....
அந்த சமயம் உங்களுக்குஅந்த பொண்ணு கிட்ட இருந்து phone வருது....நீங்களும் phone attend பண்ணுவிங்க..... திடிக்கிடே "இந்த நேரத்துல்ல எவண்டdisturb பண்றான்னு"..
அப்ப கேட்கும் ஒரே female voice அவங்க பேர சொல்லிகிட்டே "நான்தான் xxxxபேசுறேன்அப்படின்னு ஒரு soft voice ....
அவ்ளவு தான் நீங்க... தல கால் புரியாது......

ok இனி daily உங்க call காக அவங்கஅவங்க call காக நீங்க wait பண்ற சுகம்இருக்கு பாருங்க... அத நீங்க எப்படிங்க சொல்லுவிங்க??????

அந்த கல்யாண நாலுக்க wait பண்ற சுகுமும்இதுக்கு நடுவுல dress , jewls நுஏகப்பட்ட ஷாப்பிங்.....
But wedding கார்டு மட்டும் உங்களோட selection .....

சரிங்க finally கல்யாண நாள்எல்லா relatives , friends , இன்னு உங்கள ஓடிகிட்டுகலாட்ட பன்றதும்னு நைட் ஓடிடும் reception ...
காலைல நல்ல தூக்கத்துல எழுப்பி குளிக்க சொல்லிநெருப்க்கு முன்னாலஉட்கார சொல்லி நமக்கு தெரியாத விசயத்த(மந்திரம்சொல்ல சொலுவாங்க...
சரின்னு அதயும் செய்வோம்... அப்போ அந்த பொண்ணு வந்து பக்கத்துலஉட்காந்ததும் உலகத்துல நீங்க தான் பெரிய ஆளு மாத்ரி ஒரு நெனப்பு...

அப்புறம் நீங்க தாலிய கட்டுவிங்க.... அந்த second அந்த பொண்ணு கண்லஇருந்து வரும் பாருங்க ஒரு சொட்டு கண்ணீர்என்னங்க அர்த்தம் அதுக்கு?
இவ்வளவு நேரம் comedy யா இருந்த story இனி தான் serious .....

அந்த கண்ணீற்கு அர்த்தம், "இந்த second  இருந்து நான் எல்லாத்தியும்விட்டுட்டுஉன்ன மட்டுமே நம்பி வரேன்இப்ப புடிசிருக்கற ஏன் கையேஎப்பவும் விட்டுடமாடிங்க்லே இன்னு கேட்பா"....
அத நீங்களும் புரிஞ்சிகிட்டு "விடமாட்டேன்னுஅவளோட கைய இறுக்கிபுடிசிபிங்க பாருங்கஅங்க ஆரம்பிக்கிது உங்களோட சந்தோஷம்...

யாரோ ஒரு பொன்னா இருந்தவங்க இப்போ உன்கோளோட மனைவி.... நல்லாஇருக்கு இல்ல?
ஆமாங்க first day office கு போகும் போது , "எங்க சிக்கிரம் வந்துடுங்க"அப்படின்னு ஒரு குரல்யாரும் இல்ல உங்க wife தான் புதுசா இருக்கு இல்ல?

அதுக்காகவே எப்பவும் 11 மணிக்கு வர நீங்க daily 6 மணிக்கெல்லாம் வரஆரம்பிபிங்க... அதுவும் நல்லா தான் இருக்கும்....
பாவம் உங்களுக்காக சமைக்கிற அவங்களுக்கு help பண்ணிகிட்டே ஒரு சின்னவிளையாட்டு... அவ்ளவுதான் எல்லாம் veggs .... spoil 
இப்போ ரெண்டு பேரும் அத கிளீன் தான் பண்ணனும் no சமையல்.... order from resturant ....
same time  அவங்க அம்மா call பண்ணுவாங்கஉடனே ஒரு பொய் சமச்சிசாப்டாசின்னு.... 

நல்லா இருக்கு இல்லகொஞ்சம் நேரம் relax அஹ TV அதுவும் அவங்க தோல்மேல கைபோடுகிட்டே...
after few months .. getting a news.... that u gonna be dad.....

வேற என்னங்க வேணும்... இனி அவங்க கால் கூட தரைல படமாபார்த்துக்கணும்னு பார்துபிங்க .... அவங்கள evening beech ku walking கூட்டிட்டுபோறது,
புடிச்சதெல்லாம் வாங்கி குடுக்கறது.... அவங்க tired அஹ இருந்த உங்க தோள்ளசாய்ச்சி தூங்க வைக்கறதுன்னு ரொம்ப நல்லா இருக்கும்...
கால் வலி வந்தா கால புடிச்சு தூங்க வைக்கறதுதூங்கும் போது அவங்க கைஉங்க மேல இருந்தா நீங்க திரும்பி படுக்கணும் போல இருக்கும் ஆனாலும்,
எங்க அவங்க தூக்கம் களஞ்சிடோமொனு அப்படியே பொறுத்துகிட்டுஇருக்கரதுளும் ஒரு சுகம் இருக்குமுங்க....
திடிருன்னு அவங்க முழிச்சு பார்த்து நீங்க தூங்கலன்னு தெரிஞ்சதும் உங்கநெற்றி மேல ஒரு முத்தம் குடுத்து "தூங்குங்கஇன்னு சொன்னதும்!!!!!
அத விட வேற என்னங்க வேணும் உங்கலுக்கு?

உங்க குழந்தை பிறக்க போற தருணம், hospital  tension ஓட என்னபண்றதுன்னு தெரியாம இருக்கும் போது உங்க கண்ல இருந்து உங்களுக்கேதெரியாம ஒரு சொட்டு கண்ணீர் வரும் பாருங்கஅதுக்கு என்னங்க அர்த்தம்?

ஒன்னும் இல்ல அன்னைக்கு உங்க கல்யாண நாள்ல உங்க wife கைய இறுக்கிபுடிச்சிங்களே அதுக்குதாங்க!!!..
அந்த குழந்தைய பார்த்ததும்தூக்கிட்டு ஒரு முத்தம் கொடுத்து அப்படியே உங்கwife கைய புடிசுகிட்டு அவங்க நெற்றி  ஒரு முத்தம் குடுபிங்க பாருங்க?
அவ்ளவு தான்உங்க மனைவி பட்ர சந்தோசத்துக்கு அளவே இருக்காது.....

எப்படிங்க இருக்கும் இந்த மாத்ரி உங்களோட marriage life இருந்தா?
நான் அப்படி தான் இருப்பேன்...... But ஏமாந்தும் போய்டேன்.... What to do happens in life illa??????