வீச மறுக்கும் காற்றும்
கைகட்டி நிற்கும் அலைகளும்
உதிக்க மறந்த சூரியனும்
ஒளியில்லா பௌர்ணமி நிலவும்
சாத்தியமா இந்த பூமியிலே?
சத்தியமாய் சாத்தியமடி எந்தன் கவிதையிலே!
உதிக்க மறந்த சூரியனும்
ஒளியில்லா பௌர்ணமி நிலவும்
சாத்தியமா இந்த பூமியிலே?
சத்தியமாய் சாத்தியமடி எந்தன் கவிதையிலே!
இன்றைய காதல்
பார்த்தோம்
சிரித்தோம்
பழகினோம்
துடித்தோம்
தவித்தோம்
திரிந்தோம்
உலாவினோம்
அளாவினோம்
இணைந்தோம்
கலந்தோம்
இன்புற்றோம்
இறுதியில்
மணந்தோம்
வேறு வேறாய்!
பழகினோம்
துடித்தோம்
தவித்தோம்
திரிந்தோம்
உலாவினோம்
அளாவினோம்
இணைந்தோம்
கலந்தோம்
இன்புற்றோம்
இறுதியில்
மணந்தோம்
வேறு வேறாய்!
நீ இல்லாதபோது!...
நீ இல்லாதபோதுதான் புரிகிறது
உன் இருப்பின் அவசியம்!.. ரகசியம்!
இன்னும் என்னென்னவோ! ....
மறைக்க மனமில்லை மறைத்தால்
மனம் செய்யும் தற்கொலை!
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கோபம்! வெறுப்பு! அகராதித்தனம்!...
யாரிடம் உரிமை காட்டுவாய் எனையன்றி?!....
"பக்குவப்படுவாய்" என்றுதான்
பலவும் சொல்லித்தீர்த்தேன்
"பழகிப்போச்சு" என்கிறாய்!
"பாடாய்படுத்துகிறாய்" நீ
தினமும் சொல்லும் "அமுதமொழி"
என்ன செய்வேன்?! நான் இன்னும் பக்குவப்படவில்லை!..
"மறந்து தொலைக்கிறேன்" உன்னோடு
சண்டை போட்டும் சமாதானம் செய்துகொள்ள!......
இப்போதுதான் புரிகிறது நீ இல்லாத போது
நிகழும் நிகழ்வுகளும் அதன் நிறைவுகளும்!!....
இன்னும் என்னென்னவோ! ....
மறைக்க மனமில்லை மறைத்தால்
மனம் செய்யும் தற்கொலை!
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கோபம்! வெறுப்பு! அகராதித்தனம்!...
யாரிடம் உரிமை காட்டுவாய் எனையன்றி?!....
"பக்குவப்படுவாய்" என்றுதான்
பலவும் சொல்லித்தீர்த்தேன்
"பழகிப்போச்சு" என்கிறாய்!
"பாடாய்படுத்துகிறாய்" நீ
தினமும் சொல்லும் "அமுதமொழி"
என்ன செய்வேன்?! நான் இன்னும் பக்குவப்படவில்லை!..
"மறந்து தொலைக்கிறேன்" உன்னோடு
சண்டை போட்டும் சமாதானம் செய்துகொள்ள!......
இப்போதுதான் புரிகிறது நீ இல்லாத போது
நிகழும் நிகழ்வுகளும் அதன் நிறைவுகளும்!!....
No comments:
Post a Comment