Pages

தேடல் செய்…நட்பை சுவாசிக்க...

மொழியின் புகழ்
பாடா புலவனும்
இல்லை…

மலரின்
மனம் இல்லா கவிதையும்
இல்லை…

தென்றலின் இதம்
தொடா மரமும்
இல்லை...

விழியின் வீச்சு
அறியா கவிஞனும்
இல்லை…

நட்பின் வாசம்
சுவாசிக்கா மனமும்
இல்லை…

ஆகவே...

மனமே
தேடல் செய்…நட்பை சுவாசிக்க...

No comments:

Post a Comment