Pages

நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை

ஒரு வரி நீ, ஒரு வரி நான், 
திருக்குறள் நாம், உண்மை சொன்னேன் 
தனித் தனியே பிரித்து வைத்தால் 

பொருள் தருமோ கவிதை இங்கே 
உன் கைகள் என் பேனா துடைக்கின்ற கைக்குட்டை  
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை 
என்னை நானே தேடிப்போனேன், பிரிவினாலே நீயாய் ஆனேன்.  

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று 
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று..

நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை 
நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை 
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே  
அன்பே அன்பே அன்பே அன்பே  .....

உன்னிடத்தில் மட்டும் முருங்கையின் வலிமையை கொள்கிறேன்

தவித்திருக்கும் நேரத்தில்
உன் தோள் தேடுகிறேன்...!
இன்னொருமுறை வதைத்து விடாதே...
உன்னிடத்தில் மட்டும்
முருங்கையின் வலிமையை கொள்கிறேன்...
உன் பயணத்தில் சகபயணியாய்
எனக்கொரு வரம் கொடு...

என் உயிரோடு உறவாடி
கவிதையாக பயணிக்கிறேன்....

ஒரு நாள் நீ நானாக வேண்டும்!


என் உள்ளத்தில் நீ இல்லை என்று எண்ணிவிடாதே . .

ஓயாது உன்னை 
திட்டிகொண்டிருப்பதால் . . 
என் உள்ளத்தில் 
நீ இல்லை 
என்று எண்ணிவிடாதே . . 

என் சிந்தனை எப்போதும் 
உன்னை மட்டும் தான் 
சுற்றிகொண்டிருக்கிறது , 
உனக்கு அன்னையாக 
என்னாலும் உன்னை 
சுமந்து கொண்டு தான் இருக்கிறேன் 
உள்ளத்தால் உயிரால். . 

அதனால்தானே கனவுகளை நம்பினேன்

எதற்கும்
காரணம் கேட்டகாதே
விதியின்
வஞ்சகம் இது

நிஜங்களை
வெறுக்க செய்தாய்
அதனால்தானே
கனவுகளை நம்பினேன்

உன்னை காணும்வரை
நிமிடங்களை கணக்கிட்டு
செலவு செய்தேன்
இன்று அனுமதியின்றி
நகர்ந்துகொண்டிருகிறது
ஒவ்வொரு வினாடியும் .....

இதுவரை உன்னை
காண்பதற்காக
என் கால்களை
வேலை வாங்கினேன்
எவர் கண் பட்டதோ
இருவேறு கூறுகளாக
இருக்கிறோம் இன்று !

இனியும் என் கண்கள்
உனக்காக
அழாமல் இருக்கட்டும் ,
உன் சுடும் சொற்கள்
சுடாமல் இருந்தால் ......
தணல் பூவிலும்
தஞ்சமடைவேன் !

இறங்க மறுக்கிறாய் இதயத்தை விட்டு...

உறங்க மறுக்கிறது
என் கண்கள்..

நீ


இறங்க மறுக்கிறாய்
இதயத்தை விட்டு...

இருதலை கொள்ளி எறும்பாய் என்னுள் எரிகின்றது குழப்பம்

விலகி விடு
என்கிறது
சூழல்!

இப்படியே
இருந்து விடு
என்கிறது
மனது!

இருதலை கொள்ளி
எறும்பாய்
என்னுள்
எரிகின்றது
குழப்பம்!

வாழ்க்கையின் சுவடுகள் எல்லாம் வெறும் வடுக்களின் எச்சம்!

சிரிக்கும் போதெல்லாம்
சிரித்தாளென
நான் காதல் கொண்டேன்

நான் அழுத போதும்
சிரித்து சிரித்து
என் காதல் கொன்றாள்!

பாரதியின் செல்லம்மா என்றிருந்தேன்
இல்லை
நான் யானையென
என் குரல்வலை நசுக்கிவிட்டாள்!

வாழ்க்கையின்
சுவடுகள் எல்லாம் வெறும்
வடுக்களின் எச்சம்!

வரம் கேட்கும் முன்பே
வாரி வழங்கிவிட்டேன் சிவன் போல
ஏறி மிதித்துவிட்டாள் அந்த எமன் போல!

பயணம் முடிந்தாலும்
சேருமிடம் வரவில்லை!

மனமும் வெறுத்தது
மணமும் முறிந்தது!

அவள் மேல் வைத்த மொத்த நம்பிக்கையும்
அவநம்பிக்கையே!

மலர் வந்து பேசாததால் இளம் தென்றல் தீயானதே..

உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்....
உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்....

உனை இங்கு காணாததால் உலகங்கள் போய்யானதே...
மலர் வந்து பேசாததால் இளம் தென்றல் தீயானதே..

உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்....

இதயமே இதயமே உருகுதே உருகுதே
நிழலென தொடரும் தொடரும் எனது ஜீவனே.............!!!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே...

வண்ணம் கொண்ட வெண்ணிலவே... வானம் விட்டு வாராயோ... விண்ணிலே பாதை இல்லை... உன்னை தொட ஏணி இல்லை...
பக்கத்தில் நீயும் இல்லை... பார்வையில் ஈரம் இல்லை... சொந்தத்தில் பாஷை இல்லை.. சுவாசிக்க ஆசை இல்லை...
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை... நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை...
தள்ளி தள்ளி நீ இருந்தால்.. சொல்லி கொள்ள வாழ்க்கை இல்லை...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே... வானம் விட்டு வாராயோ... விண்ணிலே பாதை இல்லை... உன்னை தொட ஏணி இல்லை...
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறிப்பேன்... நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி...
கன்னி உன்னை பார்த்திருப்பேன்... கால்கடுக்க காத்திருப்பேன் ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்..
தேவி வந்து சேர்ந்து விட்டால்... ஆவி கொண்டு நான் நடப்பேன்...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே... வானம் விட்டு வாராயோ... விண்ணிலே பாதை இல்லை... உன்னை தொட ஏணி இல்லை...