Pages

வாழ்க்கையின் சுவடுகள் எல்லாம் வெறும் வடுக்களின் எச்சம்!

சிரிக்கும் போதெல்லாம்
சிரித்தாளென
நான் காதல் கொண்டேன்

நான் அழுத போதும்
சிரித்து சிரித்து
என் காதல் கொன்றாள்!

பாரதியின் செல்லம்மா என்றிருந்தேன்
இல்லை
நான் யானையென
என் குரல்வலை நசுக்கிவிட்டாள்!

வாழ்க்கையின்
சுவடுகள் எல்லாம் வெறும்
வடுக்களின் எச்சம்!

வரம் கேட்கும் முன்பே
வாரி வழங்கிவிட்டேன் சிவன் போல
ஏறி மிதித்துவிட்டாள் அந்த எமன் போல!

பயணம் முடிந்தாலும்
சேருமிடம் வரவில்லை!

மனமும் வெறுத்தது
மணமும் முறிந்தது!

அவள் மேல் வைத்த மொத்த நம்பிக்கையும்
அவநம்பிக்கையே!

No comments:

Post a Comment