Pages

அதனால்தானே கனவுகளை நம்பினேன்

எதற்கும்
காரணம் கேட்டகாதே
விதியின்
வஞ்சகம் இது

நிஜங்களை
வெறுக்க செய்தாய்
அதனால்தானே
கனவுகளை நம்பினேன்

உன்னை காணும்வரை
நிமிடங்களை கணக்கிட்டு
செலவு செய்தேன்
இன்று அனுமதியின்றி
நகர்ந்துகொண்டிருகிறது
ஒவ்வொரு வினாடியும் .....

இதுவரை உன்னை
காண்பதற்காக
என் கால்களை
வேலை வாங்கினேன்
எவர் கண் பட்டதோ
இருவேறு கூறுகளாக
இருக்கிறோம் இன்று !

இனியும் என் கண்கள்
உனக்காக
அழாமல் இருக்கட்டும் ,
உன் சுடும் சொற்கள்
சுடாமல் இருந்தால் ......
தணல் பூவிலும்
தஞ்சமடைவேன் !

No comments:

Post a Comment