Pages

இதயத்தில் கத்தியை நுழைக்காதே

இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகா....தே

தேவதை உன்னிடம் நான்
வரமா கேப்பேன்
கேளடி
தேவதை உன்னையே
வரமாய்கேப்பேன்
நானடி
தூங்கினால் தூக்கத்தில் 
கனவிலும் கேட்கும்
உந்தன் காலடி
எதற்கேன் இந்த இடைவெளி
ஏனடி?


நகருதே நகருதே
இந்த நிமிடம் நகருதே
எந்தன் இதயம் பதறுதே

உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால்கூட இறக்காதே

யாரோ என் நெஞ்சை தீண்டியது..

யாரோ என் நெஞ்சை தீண்டியது - ஒரு விரலாலே 
தூங்கும் என் உயிரை தூண்டியது... 


யாரோ என் கனவில் பேசியது - இரு விழியாலே 
வாசம் வரும் பூக்கள் வீசியது 


தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் 
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம் 


முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே ...


நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னை கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே


மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே 

ஓ பேச சொல்கிறேன் உன்னை 
நீ ஏசி செல்கிறாய் என்னை 
வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா 
எண்ணிக கொள்கிறேன் அன்பே..!


காலம் என்பது மாறும் 
வலி தந்த காயங்கள் ஆறும் 
மேற்கு சூரியன் மீண்டும் காலையில் 
கிழக்கில் தோன்றி தான் தீரும்..!


நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா 
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா 


உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா ..!

நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னை கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே!


மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே !


ஓ பாதி கண்களால் தூங்கி 
என் மீதி கண்களால் ஏங்கி 
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே 
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி


நேசம் என்பது போதை 
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை 
என்ற போதிலும் அந்த துன்பத்தை 
ஏற்று கொள்பவன் மேதை 


உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?


இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னை கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே


மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே !

மௌனித்தலிலும்... வலிகளடா

பேசவே கூடாதென்ற 
 முடிவோடு தான் மௌனித்தேன் .. 
அரைகுறை கனவினில் 
 உந்தன் புன்னகை 
 கண்ணில் தெரியும்வரை.... 
மௌனித்தலிலும்... வலிகளடா 
உன்னோடு மட்டும் 
 உன்னிடம் மட்டும்

வெற்றிடத்தில் வெறுமையாய்

எதையுமே எண்ணிட தோன்றாது
எதையுமே பேசிட தோன்றாது..
உன் நினைவுகள் மட்டும்
உந்தன் பெயரினை மட்டும் மனதில்...
அசைபோட்ட படி
வெற்றிடத்தில் வெறுமையாய்
நான் நான் மட்டுமே 

உன் குரல் போதும்....

உன் குரல் கேட்டாலே உதிரத்தில்
அலையடிக்கும்...

உன் குரல் போதும்...
உயிரின் அணுவும அதிரும்..

எந்த பட்டு கேட்ட போதும் உந்தன்
நினைவே நெஞ்சில் மோதும்...

என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்....

நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை

ஒரு வரி நீ, ஒரு வரி நான், 
திருக்குறள் நாம், உண்மை சொன்னேன் 
தனித் தனியே பிரித்து வைத்தால் 

பொருள் தருமோ கவிதை இங்கே 
உன் கைகள் என் பேனா துடைக்கின்ற கைக்குட்டை  
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை 
என்னை நானே தேடிப்போனேன், பிரிவினாலே நீயாய் ஆனேன்.  

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று 
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று..

நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை 
நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை 
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே  
அன்பே அன்பே அன்பே அன்பே  .....

உன்னிடத்தில் மட்டும் முருங்கையின் வலிமையை கொள்கிறேன்

தவித்திருக்கும் நேரத்தில்
உன் தோள் தேடுகிறேன்...!
இன்னொருமுறை வதைத்து விடாதே...
உன்னிடத்தில் மட்டும்
முருங்கையின் வலிமையை கொள்கிறேன்...
உன் பயணத்தில் சகபயணியாய்
எனக்கொரு வரம் கொடு...

என் உயிரோடு உறவாடி
கவிதையாக பயணிக்கிறேன்....

ஒரு நாள் நீ நானாக வேண்டும்!


என் உள்ளத்தில் நீ இல்லை என்று எண்ணிவிடாதே . .

ஓயாது உன்னை 
திட்டிகொண்டிருப்பதால் . . 
என் உள்ளத்தில் 
நீ இல்லை 
என்று எண்ணிவிடாதே . . 

என் சிந்தனை எப்போதும் 
உன்னை மட்டும் தான் 
சுற்றிகொண்டிருக்கிறது , 
உனக்கு அன்னையாக 
என்னாலும் உன்னை 
சுமந்து கொண்டு தான் இருக்கிறேன் 
உள்ளத்தால் உயிரால். . 

அதனால்தானே கனவுகளை நம்பினேன்

எதற்கும்
காரணம் கேட்டகாதே
விதியின்
வஞ்சகம் இது

நிஜங்களை
வெறுக்க செய்தாய்
அதனால்தானே
கனவுகளை நம்பினேன்

உன்னை காணும்வரை
நிமிடங்களை கணக்கிட்டு
செலவு செய்தேன்
இன்று அனுமதியின்றி
நகர்ந்துகொண்டிருகிறது
ஒவ்வொரு வினாடியும் .....

இதுவரை உன்னை
காண்பதற்காக
என் கால்களை
வேலை வாங்கினேன்
எவர் கண் பட்டதோ
இருவேறு கூறுகளாக
இருக்கிறோம் இன்று !

இனியும் என் கண்கள்
உனக்காக
அழாமல் இருக்கட்டும் ,
உன் சுடும் சொற்கள்
சுடாமல் இருந்தால் ......
தணல் பூவிலும்
தஞ்சமடைவேன் !

இறங்க மறுக்கிறாய் இதயத்தை விட்டு...

உறங்க மறுக்கிறது
என் கண்கள்..

நீ


இறங்க மறுக்கிறாய்
இதயத்தை விட்டு...

இருதலை கொள்ளி எறும்பாய் என்னுள் எரிகின்றது குழப்பம்

விலகி விடு
என்கிறது
சூழல்!

இப்படியே
இருந்து விடு
என்கிறது
மனது!

இருதலை கொள்ளி
எறும்பாய்
என்னுள்
எரிகின்றது
குழப்பம்!

வாழ்க்கையின் சுவடுகள் எல்லாம் வெறும் வடுக்களின் எச்சம்!

சிரிக்கும் போதெல்லாம்
சிரித்தாளென
நான் காதல் கொண்டேன்

நான் அழுத போதும்
சிரித்து சிரித்து
என் காதல் கொன்றாள்!

பாரதியின் செல்லம்மா என்றிருந்தேன்
இல்லை
நான் யானையென
என் குரல்வலை நசுக்கிவிட்டாள்!

வாழ்க்கையின்
சுவடுகள் எல்லாம் வெறும்
வடுக்களின் எச்சம்!

வரம் கேட்கும் முன்பே
வாரி வழங்கிவிட்டேன் சிவன் போல
ஏறி மிதித்துவிட்டாள் அந்த எமன் போல!

பயணம் முடிந்தாலும்
சேருமிடம் வரவில்லை!

மனமும் வெறுத்தது
மணமும் முறிந்தது!

அவள் மேல் வைத்த மொத்த நம்பிக்கையும்
அவநம்பிக்கையே!

மலர் வந்து பேசாததால் இளம் தென்றல் தீயானதே..

உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்....
உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்....

உனை இங்கு காணாததால் உலகங்கள் போய்யானதே...
மலர் வந்து பேசாததால் இளம் தென்றல் தீயானதே..

உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்....

இதயமே இதயமே உருகுதே உருகுதே
நிழலென தொடரும் தொடரும் எனது ஜீவனே.............!!!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே...

வண்ணம் கொண்ட வெண்ணிலவே... வானம் விட்டு வாராயோ... விண்ணிலே பாதை இல்லை... உன்னை தொட ஏணி இல்லை...
பக்கத்தில் நீயும் இல்லை... பார்வையில் ஈரம் இல்லை... சொந்தத்தில் பாஷை இல்லை.. சுவாசிக்க ஆசை இல்லை...
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை... நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை...
தள்ளி தள்ளி நீ இருந்தால்.. சொல்லி கொள்ள வாழ்க்கை இல்லை...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே... வானம் விட்டு வாராயோ... விண்ணிலே பாதை இல்லை... உன்னை தொட ஏணி இல்லை...
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறிப்பேன்... நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி...
கன்னி உன்னை பார்த்திருப்பேன்... கால்கடுக்க காத்திருப்பேன் ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்..
தேவி வந்து சேர்ந்து விட்டால்... ஆவி கொண்டு நான் நடப்பேன்...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே... வானம் விட்டு வாராயோ... விண்ணிலே பாதை இல்லை... உன்னை தொட ஏணி இல்லை...

ஆதரவாய் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு...

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு..
ஆதரவாய் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு...

ஆரிரரோ... இவர் யார் எவரோ...
பதில் சொல்வார் யாரோ.....!!!!

இப்படி ஒரு தோழி அல்லது காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

இப்படி ஒரு தோழி அல்லது காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள். நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால், அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப்பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்காவிட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக்கொள்வாள்.

ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான் இறைவன்.....!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்..

இளவேனில் உன் வாசல் வந்தாடும்,
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்..

இளவேனில் உன் வாசல் வந்தாடும்,
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்....

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்....

  

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்..
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்...

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்...
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்...

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு,
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு..

இதிலென்ன பாவம்..
எதற்கிந்த சோகம் கிளியே............!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

  

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது,
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது...

கடல்களில் உருவாகும் அலையானது,
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது....

நிலவினை நம்பி இரவுகள் இல்லை,
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை...

ஒரு வாசல் மூடி,
மறுவாசல் வைப்பான் இறைவன்.....!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்.....!!!!

எதுவரை வாழ்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்...

எதுவரை வாழ்கை அழைக்கிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்...

விடைபெறும் நேரம் வரும்போதும் 
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்...

பரவசம்.. இந்த பரவசம்...
எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கு வாழுமே....

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

  

நாமெல்லாம் சுவாசிக்க தனித்தனி காற்று கிடையாது...
மேகங்கள்.. மேகங்கள்.. இடங்களை பார்த்து பொழியாது...

கோடையில் இன்று இல்லை உதிரும்..
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்...

வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்...

முடிவதும்.. பின்பு தொடர்வதும்...
இந்த வாழ்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி....

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

கருணை தாங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு...

இன்னும்... வாழனும்... நூறு ஆண்டு.....!

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்...
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே, பூமியில் வாழ்கையை நம்பி வாழ்ந்து விடைபெருவோம்...!!

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

மனமே, ஓ மனமே நீ மாறிவிடு....!

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது...
என்ன இந்த வாழ்கை என்று எண்ணம் தோன்ற கூடாது...

எந்த மனிதன் நெஞ்சுக்குள், காயம் இல்லை சொல்லுங்கள்...
காலப்போக்கில் காயம் எல்லாம், மறந்து போகும் மாயங்கள்...

உளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும்..
வழி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்...

யாருக்கில்லை போராட்டம்,
கண்ணில் என்ன நீரோட்டம்...
ஒரு கனவு கண்டால், அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்.....

மனமே, ஓ மனமே நீ மாறிவிடு....
மழையோ, அது பணியோ நீ மோதிவிடு....

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...

  

வாழ்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்...

லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு..

மனிதா உன் மனதை கில்லி விதைபோடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்...

தோல்வி இன்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா..
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்....

மனமே, ஓ மனமே நீ மாறிவிடு....
மழையோ, அது பணியோ நீ மோதிவிடு....

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே..
இரவானால் பகலோன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்.. நம் வாழ்வில்...
லட்சியம் நிச்சயம் வெல்வோம்.. ஒரு நாளில்...

மனமே, ஓ மனமே நீ மாறிவிடு....
மழையோ, அது பணியோ நீ மோதிவிடு....!!!!!!

உன்னை காணாமல் தவிக்கிறேன் ♥

நினைவில் சிரிக்கிறேன்
நிஜத்தில் அழுகிறேன்
கனவில் விழிக்கிறேன்
உன்னை காணாமல் தவிக்கிறேன் ♥
**************************************

உண்மையாக
நேசித்த இதயத்தை விட்டு
பிரிந்து விடாதே
எத்தனை இதயங்கள்
உன்னை நேசித்தாலும்
அந்த ஒரு இதயம் போல்
ஆகாது ♥♥
**************************************

உன்னோடு பழகிய போது தான்
என் இதயம்
நட்பின் வலிமையை அறிந்துகொண்டது
உன்னோடு வாழ்ந்தபோது தான்
என் இதயம்
வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்துகொண்டது....
**************************************

♥...உன்னைவிட்டு...♥
♥...விலக முயல்கிறேன்...♥
♥...அலைகளாய்...♥
♥...விடாமல்...♥
♥...உள்ளிழுத்து கொண்டிருக்கிறது...♥
♥...உன் நினைவுகள்...♥
♥...கடலாய்...♥
*************************************

உலகிலேயே மிகச்சிறிய காதல்கதை
நான் அவளை காதலிப்பது
உலகிலேயே மிகப்பெரிய சோகக்கதை
அவள் வேறோருவனை காதலிப்பது...♥
**************************************

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
இதழ் திறந்து பேசும் மலர்,

விழி திறந்து பார்க்கும் சூரியன்,

இமைக்காத வானம்,

இனிமையான உலகம்,

அன்பான நட்பு,

எல்லாம் உனக்காக காத்திருக்க,

நீ மட்டும் விழிக்காமல் இருக்காலாமா,
எழுந்திரு..

காலை வணக்கம்..
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


அவளை
சிறைபிடிக்க
நினைத்து...
நான் கைதியானேன்

**********************

பெண்ணே நீ இல்லாமல்....


உன்னைவிட, கல்லறையே பக்கமடா....



உன்னாலே எனக்குள் உருவான உலகம்....
பூகம்பம் இன்றி சிதருதடா...

எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே...
என்னை இன்னும் வாழ சொல்லுதடா....

தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்...
தொட போகும் நேரம் மரணத்தின் வாசல்....

காட்டு தீ போல கண்மூடி தனிமை....
என் சோகம் சுடர்விட்டு எரியுதடா....

மனசுக்குள் சுமந்த ஆசைகளெல்லாம்...
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா....

யாரிடம் உந்தன் கதை பேச முடியும்....?
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்,
பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா.....

பூவானம் போர்க்களமாய் மாறுதடா....
காலம் கூட கண்கள் மூடிகொண்டதடா....
உன்னைவிட, கல்லறையே பக்கமடா....

கவிதைகள் சொல்லவா?

இதயம் கூட
இடைவெளி விட்டுத்தான்
துடிக்கும்!
அந்த இடைவளி கூட
உன்னைப்பற்றித்தான்
நினைக்கும்... ♥

********************

எனக்கு பிடித்தது போல்
உன்னை படைத்த இறைவன்
ஏனோ எனக்கென்று எழுதாமல்
விட்டு விட்டான் உன்னை....

********************

தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியாமல் தவிக்கும்
இதயத்தின் ஆசைதான்
காதல் ♥ ♥ ♥

********************

கண்ணில் கண்ட பெண்ணை
நேசிப்பதை விட,
உன்னை கருவில் சுமந்த
தாயை நேசி
உன்னையும் ஒரு பெண் நேசிப்பாள் ♥ ♥ ♥.

********************

விடியும் வரை தெரியாது, 
நடந்தது கனவு என்று...... 

... அன்பும் அப்படித்தான்.. 
பிரியும் வரை தெரியாது. 
எவ்வளவு ஆழமானது என்று....

*********************

Orumurai Kadhalum Natpum Sandhithu kondana...

Kadhal: Naan vandhuvitta piragu nee edharku...?

Nattpu: Nee vittu sendra piragu, Kanneer thudaippadharkku...

*********************

Imai pozhudhum idai vidaamal..
Alavukku adhigamaaga
enn manadhil pudhaindhirukkum

Unn ninaivugaley.....

Unn mouna nerangalil ennai
mirugamaai maatrugiradhu...

**********************

தனிமையைத்
தேடுகிறேன்!
என்னுள் புதைந்த
உண்மைகளை
மறப்பதற்கு
உன் நினைவுக்குள்!

**********************

நீ முறைத்தால் என்ன...?
நீ மறுத்தால் என்ன..?
நீ தடுத்தால் என்ன...?
நீ போனால் என்ன...?
நான் காத்திருப்பேன்...
நீ தந்த காயங்களை,
தாங்கிய இதயமுடன்

**********************

சந்திக்கும்போது

எதார்த்தமாக அமைந்தாலும்

சாகும் வரை

எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது.

"நட்பு"......

***********************

Unakkaaga kaathiruppadhai vida...
Enn maranathirkaaga kaathirukkalaam....

Adhu mattumey oru naal nichayam ennai thedi varum.....

***********************

நீ பார்த்த நிலவு அழகா?
நான் பார்த்த நிலவு அழகா?
நீ வானத்தை பார்க்கிறாய்
நானோ உன் முகத்தை பார்க்கிறேன்

***********************

நினைக்கும்பொழுதெல்லாம் நிசப்தமாய்

இரண்டு வருட அனுபவம்...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம்
நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...



கண்கள் சந்தித்ததால் காதல் வந்தது

கேள்விப்பட்டிருக்கிறேன் ..........

மோதல் வந்ததால் காதல் வந்தது

அறிந்திருக்கிறேன்................

நாமோ......

காதலைக் கற்றுக்கொண்டது

வார்த்தைவிளையாட்டாலல்லவா
தோழி......



இரண்டு வருட அனுபவம்...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம்
நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...



தொலைப்பேசியில்......

மௌனத்திற்கு சில நிமிடம்...

மோகத்திற்கு சில நிமிடம்...

சண்டைக்கு சில நிமிடம்...

சமாதானத்திற்கு சில நிமிடம்...

சந்தோசத்திற்குசில நிமிடம்...

முத்தமழைபொழிய சில நிமிடம்...



இரண்டு வருட அனுபவம்...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம்
நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...



முதல்சந்திப்பில்...........

..


கண்கள் சந்தித்தபோது......

கலக்கமான சலனம் ஏனோ?

பயணப்பொழுதுகளிலெல்லாம்.......

அனுபவசாலியாய் பழகினாய்.....

அலைக்கழிக்காமல் அரும்பினாய்.....

அருகிலமர்ந்து அனுபவித்தேனடி தோழி..


எட்டுமணிநேரமும்.............

எட்டு நிமிடமானதடி தோழி.



இரண்டு வருட அனுபவம் ...

இனிமையாய் இன்றும் இதயத்தில்...

நினைக்கும்பொழுதெல்லாம் நிசப்தமாய்...

இதயத்தின் ஓரத்தில் இறுக்கமாய்...